Tamil Friends Poems - நட்பு

தனிமையை நேசித்தேன்
கவலை மறந்தேன்
நட்பாய் நீ வந்தாய்
தனிமை மறந்தேன்...
பாசத்தை காட்டினாய்
பரிவாய் பேசினாய்
குறும்பாய் சிரித்தாய்
தேடலை உணர்த்தினாய்
தூக்கத்தை மறந்தேன்
சந்தோஷத்தை உணர்ந்தேன்
... பிரிவை உணர்த்தினாய்
எதனை உணர்த்த??
வேண்டாம் இந்த நிலை..
மீண்டும் தனிமை நேசிக்க
பழகி கொள்கிறேன்...
இனியும் தோல்விகள் தாங்கும்
இதயம் எனக்கில்லை
நட்பே என்றும் நட்பாய் இரு....