Tamil Kadhal Kavithai - வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான்

வேறாய் இருந்தாலும் நம் வேதம் ஒன்றுதான்

உனையும் எனையும்
பிரிக்கிறார்களாம்
ஏதும் அறியாக்
காதல் செய்ததால்
தேகம் பாராமல்
தேன் கிண்ணமாய்
இனிக்கும் காதலை
தேகத்தால் பிரிக்கப்
பார்கிறார்களாம்
தேசம் தாண்டி வந்த
காதல் என்பதால்
தேள் என வார்த்தையால்
கொட்டுகிறார்கள்
தேவைகளை மட்டும்
பார்த்திருந்தால்
தேசம் தாண்டி வந்திருப்போம்
என்பதை அறியாமல்
உயிரென நேசித்து
விட்ட பின்பும்
உரியவள் பெயர்
போட தடையாம்
இவர்களை அன்பு
கொண்டவர்கள்
என்று யார் சொன்னது
கொள்கை இல்லா மனம்
கோழை என்பதை
உணராவிடின்
வேற்றுமை எமக்கில்லை
வேண்டாம் என்கிறார்கள்
வேறாய் நாம்
இருந்தாலும்-நம்
வேதம் காதல்
என்ற ஒன்றுதான்
என்பதை அறியாமல் ,,,!!!