தவமிருப்பேன் உனக்காக

உனைக் கண்ட முதல் நாள் புரியாத உணர்வு என்னுள்
புகுவது உணர்ந்தேன்..
உன் கம்பீரம்
உல்லாசச் சிதறலை என்னுள்
தெறிக்கக் கண்டேன்...
புதிதாய் உலகில் பிறந்தவளானேன்..
பார்வையால் அனுதினமும்
உன்னை நனைத்தேன்...
உன் வரவு பார்த்து நிதம் வழி பார்த்தேன்..
ஆனால் அன்பு உரைக்க தயங்கினேன்..
தேடல் ஒன்றே என் நிம்மதியானது
தவிப்பு ஒன்றே என் வாழ்வானது..
உன் வரவில்
உள்ளம் உவகை கொண்டு
உடைப்பெடுத்தது அன்று..
உன் பிரிவால் கண்ணீர்
பொழிகிறது இன்று...
நான் வாழும் வரை
நினைத்திருப்பேன் உனையே..
மறுபிறப்பில் உனைச் சேர
தவமிருப்பேன் தவிப்பாக....